நம்மில் பலர் பிறந்த நாட்டில், நமது ஊரில் கூட்டுக்குடும்பமாகத் தான் வாழ்ந்திருக்கிறோம். ஆனால், புலம்பெயர்ந்த அல்லது குடிபுகுந்த நாடுகளில் சொந்தப் பெற்றோரே குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்வது மருகி வருகிற பின்னணியில், தாத்தா, பாட்டியுடன் தொடர்பில் இருந்தால் மட்டும் போதுமா அல்லது தாத்தா, பாட்டியுடன் பேரக் குழந்தைகள் வாழ்வது நல்லதா என்பது குறித்து ஒரு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர், இருபத்தி மூன்று வருடங்களாக குழந்தை மருத்துவராகப் பணியாற்றியவரும், ஐந்து குழந்தைகளுக்குப் பாட்டியுமான வைத்தியர் திருமதி மாலினி ஆறுமுகம், சிட்னியில் வாழும் நாச்சிமுத்து ரஞ்சித்குமார், மலர் தம்பதிகளின் குழந்தைகள் ஓவியா, இலக்கியா மற்றும் தாத்தா கிருஷ்ணமூர்த்தி, பாட்டி இந்திராணி. நிகழ்ச்சித் தயாரிப்பு: குலசேகரம் சஞ்சயன்.