நாட்டில் புதிதாக குடியேறுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்ற விவாதம் எழுந்துள்ளது. புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை தாம் குறைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தாம் பதவிக்கு வந்தால் அரசு கூறும் எண்ணிக்கையைவிட மேலும் அதிகமாக குறைப்போம் என்று எதிர்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் கூறிவருகிறார். இந்த பின்னணியில் புதிய குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவது குறித்த செய்தியின் பின்னணி நிகழ்ச்சி. இதில் தனது கருத்தை முன்வைப்பவர் பெர்த் நகரிலிருந்து பாஸ்கர் சத்யமூர்த்தி அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





