ஆஸ்திரேலியாவில் தற்கொலைகள் அதிகரிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? வறட்சி, நிதி நிலமை குறித்த கவலைகள் மற்றும் இணைய வழியாக நடத்தப்படும் bullying எனப்படும் அச்சுறுத்தல்கள் ஆகியன இதற்கு முக்கிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது. தற்கொலைகளைத் தடுக்கும் முயற்சிகளுக்குக் கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தற்கொலைகள் அதிகரித்து வருவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலைகளின் எண்ணிக்கையை, தற்போதுள்ள எண்ணிக்கையின் கால்வாசியாகக் குறைக்கும் ஒரு தேசிய இலக்கை நோக்கி அரசு செயல்பட வேண்டும் என அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து Rosemary Bolger எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.