ஸ்வர்ணமால்யா ஒரு திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் மட்டுமல்லாமல், பரதநாட்டியம் குறித்து ஆழமாக ஆராய்ச்சி செய்துள்ளார்.
விக்டோரிய மாநிலத்திலுள்ள Abbotsford Convent என்ற இடத்தில் பிப்ரவரி 20 முதல் மார்ச் 1 வரை நடைபெற இருக்கும் கலை அனுபவப் பகிர்வான ஹுருஹாரா என்ற நிகழ்வில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியா வரவிருக்கும் ஸ்வர்ணமால்யா அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்
இரண்டு பாகங்களாக பதிவாகியுள்ள இந்த நேர்காணலின் இறுதிப் பாகத்தில், அவரது ஆராய்ச்சி குறித்தும், தற்போது அருகி வரும் சகிப்புத்தன்மை குறித்தும், விரிவாக, மனம் திறந்து பேசுகிறார்.
நேர்காணலின் இறுதியில், நேற்று நடைபெற்ற ஒரு நடன விழாவில் நடனக் கலைஞர் ஸ்வர்ணமால்யா கணேஷ் தனது குரு கே ஜே சரசா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நடனமாடிய பாடலின் சில வரிகளையும் இணைத்துள்ளோம். அஞ்சனா மற்றும் பிந்துமாலினி நாராயணசாமி பாடிய பாடலை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் பொன்னி மற்றும் மங்கை. இந்தப் பாடலை பதிவு செய்து வழங்கிய Vincent D Souzaவிற்கு நன்றிகள்.





