இந்திய அரசியலில் இலக்கிய ஆற்றல், அரசியல் பார்வை மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து செயல்படுத்திய ஒரு சில தலைவர்களுள் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் ஒருவர். கலைஞர் கருணாநிதியின் இலக்கிய நயம் குறித்து, புதுக்கவிதைக்கென்று தமிழில் ஒரு தனி இடத்தை அமைத்துத் தந்த கவிஞர் மு மேத்தா மற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவரும், பகுத்தறிவு கருத்துகளைத் தமிழகமெங்கும் தன் எழுத்து மூலமும் பேச்சு மூலமும் பரப்பி வரும் சு ப வீரபாண்டியன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.