இந்த யுகத்தின் மிகச் சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவர் சுரதா. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியவர் சுரதா. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள். கலைமாமணி விருது, பாவேந்தர் விருது, இராஜராஜன்' விருது என்று தமிழக அரசின் அதி உயர் இலக்கிய விருதுகளை வென்றவர் சுரதா. "உவமைக் கவிஞர்' என்று பெயரே அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது. உவமைக் கவி சுரதா குறித்த காலத்துளியை முன்வைக்கிறார் றைசெல்.
Share





