SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
தங்கத்தாத்தா

நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் தந்த பெரும் புலவர் நவாலியூர் சோமசுந்தரப்புலவர். ஈழத்தமிழ் கவிதை வரலாற்றில் சிறுவர்பாடல்களால் முக்கியத்துவம் பெற்று “தங்கத்தாத்தா” என்று செல்லமாக அழைக்கப்பட்ட நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் 70ஆவது நினைவுதினம் ஜூலை மாதம் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அவர் இவ்வுலகைவிட்டுச் சென்றாலும் அவர் விட்டுச்சென்ற இலக்கியங்கள் தமிழ் வாழும்வரை வாழ்ந்து கொண்டே இருக்கும். “காலத்துளி” நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
Share