ஆகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு Fair Work Commission எடுத்துள்ள முடிவு, மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைகிறது. ஜூலை முதல் தேதியிலிருந்து, ஆகக் குறைந்த சம்பளம் மூன்று சதவீதத்தால் அதிகரிக்கிறது. வாரத்திற்கு 21 டொலர்கள் கூடுதல் ஊதியம் கிடைக்கப் போகிறது. இந்த ஊதிய உயர்வினால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடையப் போகிறார்கள். தொழிற்சங்கங்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளன. ஆனால் சிறு தொழில் முதலாளிகள் எதிர்மறையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று வணிக குழுக்கள் கூறுகின்றன. இது குறித்து Gloria Kalache மற்றும் Amelia Dunn எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share





