தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்த மதுரை ஆதீனம் மடத்திற்கு மடாதிபதியாக இருந்துவந்த 292-வது குருமகா சன்னிதானம் என்று அழைக்கப்பட்ட அருணகிரிநாதர் அவர்கள் கடந்த வாரம் காலமானார். பத்திரிகையாளராக இருந்து மடாதிபதியானவர் அவர். சைவத் தொண்டு, தமிழ்மொழி வளர்ச்சி குறித்த அக்கறை, திராவிட அரசியல் ஈடுபாடு, ஈழப் பிரச்சனை தொடர்பான அவரின் செயல்பாடு, மத நல்லிணக்க முன்னெடுப்பு என்று பயணித்த மதுரை ஆதீனம் அவர்கள் குறித்து பல கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர் கே.கே.மகேஷ் அவர்கள் நினைவுகூர்கிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




