Melbourne Artists for Asylum seekers (MAFA) அமைப்பு புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளுக்கு ஓவியம் வரைவதற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அதோடு அகதிகள் வரையும் ஓவியங்களை கொண்டு கண்காட்சி நடத்துவது மற்றும் அவர்களின் கவிதைகளை அரங்கேற்றுவது என செயற்பட்டு வருகின்றனர். மெல்பேர்னில் வசிக்கும் ஸ்ரீஹரன் கணேசன் மற்றும் ரவி என்று அழைக்கப்படும் சண்முகநாதன் நாகவீரன் ஆகிய இருவரின் MAFA உடனான அனுபவங்களின் பகிர்வுகள் கொண்டு விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share





