இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் பலரும் ஆச்சரியப்படும் வகையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. அதே வேளையில் கர்நாடகா தவிர்த்து தென்னிந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியால் வெற்றி பெற இயலவில்லை. இப்படியான அரசியல் நடப்புகளை நம்மவர்கள் அலசுகின்றனர்: பிரிஸ்பன் நகரிலிருந்து செந்தில் (4EB தமிழ் ஒலி) & மங்களம் ராஜ், சிட்னி நகரிலிருந்து லெஸ்லி குணரத்தினம், பெர்த் நகரிலிருந்து அண்ணாமலை மகிழ்நன் ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share





