பூர்வீக குடிமக்களைக் கொண்டாடும் வகையில் கடந்த வாரம் முழுவதும் NAIDOC வாரம் (National Aborigines and Islanders Day Observance Committee) கொண்டாடப்பட்டது. இன்னும் மூன்று ஆண்டுகளில் பூர்வீக மக்கள் குறித்த கருத்துத் தேர்தலை நடத்தப் போவதாக அரசு அறிவித்தது. இந்த பின்னணியில், தமிழ் மக்கள் பூர்வீக குடிமக்கள் குறித்து என்ன புரிதலை கொண்டுள்ளார்கள்? பெர்த் நகரில் Mitra Community Empowerment Inc. எனும் நிறுவனம் மூலம் பூர்வீக குடிமக்களுடன் பணியாற்றும் அரவிந்தன் ராஜரத்தினம், டார்வின் நகரில் Charles Darwin பலகலைக் கழகத்தில் மூத்த விரிவுரையாளராக பூர்வீக குடிமக்களின் நலம் தொடர்பாக அவர்களோடு பணியாற்றும் Dr ராம ஜெயராஜ், பூர்வீக குடிமக்களின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்த பிரபல எழுத்தாளர் மாத்தளை சோமு ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share




