'ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் இருப்பது தமிழினி அவர்களின் கருத்தாக இருக்காது என்கிறார் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு.திருக்குமரன்.
'ஒரு கூர் வாளின் நிழலில்' எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது தான் என்று ஒரு பகுதியினர் வாதிட,இடைச் செருகல்கள் நிறைய சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது தமிழினி எழுதியதாக இருக்காது என்று வேறு சிலர் வாதிடுகிறார்கள். அந்தவகையில் இந்தப் புத்தகத்தில் இருப்பது தமிழினி அவர்களின் கருத்தாக இருக்காது என்கிறார் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திரு.திருக்குமரன்.