தன் கண்டுபிடிப்பை சரி என நிரூபிக்க தன் உடலையே பயன்படுத்திய சாதனையாளன்!

Source: SBS Tamil
மருத்துவதுறையில் 2005-ம் ஆண்டு நோபல் பரிசினை வென்ற பேராசிரியர் பேரி ஜேம்ஸ் மார்ஷல் ஒரு ஆஸ்திரேலிய மருத்துவர் ஆவார். மன அழுத்தம், காரமான உணவுகள் மற்றும் அதிக அமிலத்தன்மை ஆகியவற்றால் வயிற்று புண் உருவாகிறது என்று நம்பப்பட்டு வந்த காலத்தில், அல்சர் எனப்படும் வயிற்று புண்ணுக்கு காரணமான ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற நுண்ணுயிரியை கண்டு பிடித்தது மட்டுமின்றி, அதை எதிர்த்து வயிற்று புண்ணை குணமாக்கும் மருந்தினையும் கண்டுபிடித்தார். இது மருத்துவ துறையில் ஒரு வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு ஆகும். தனது கண்டுபிடிப்பை உலகிற்கு நிரூபிக்க மருத்துவர் பேரி மார்ஷல், தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்தியது அதிர்ச்சி தரும் உண்மை. 2005-ம் ஆண்டின் மருத்துவ துறை சார்ந்த நோபல் பரிசினை இவர் மருத்துவர் டாக்டர் ராபின் வாரன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பேரி மார்ஷல் இவர் சந்தித்த வேதனைகளையும், பின்னர் அது சாதனையாக மலர்ந்த நிகழ்வுகளையும் “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.
Share



