புற்றுநோயை குணமாக்கும் விந்தைக்கு முதலடி வைத்தவர்!

Source: Remadevi Dhanasekar
பேராசிரியர் எலிசபெத் ஹெலன் பிளாக்பேர்ன் மற்றும் அவரது குழுவினர் மருத்துவ துறை சார்ந்த நோபல் பரிசினை 2009 ஆம் ஆண்டில் பெற்றனர். குரோமோசோமின் வால் பகுதியில் இருக்கும் டெலோமியர் குரோமோசோம்களைக் கட்டுபடுத்தும் கருவி என்பதும், டெலோமியரின் நீளம் குறைந்தால் உடல் தளர்ந்து வயதான தோற்றம் தரும் என்றும் கண்டுபிடித்தனர். அத்துடன் டெலோமியரில் இருக்கும் டெலாமீரஸ் என்ற டி.என்.ஏ குரோமோசோம்களை உடையாமல் தடுப்பதையும் கண்டுபிடித்தனர். இந்த டெலோமியரின் நீளத்தை குறைக்கும் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டால் அறுவை சிகிச்சை ஏதும் இல்லாமலேயே புற்று நோயிலிருந்து குணம் பெற வாய்ப்பிருக்கிறது என்று நம்பப்படுகிறது. “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் எலிசபெத் பிளாக்பேர்ன் குறித்த தகவலை முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.
Share



