நோபல் வென்ற புளோரி!

Source: SBS & PA Wire
அரிய நோய் எதிர்ப்பு மருந்து என உலக அரங்கில் ஒத்துக் கொள்ளப்பட்டது “பெனிசிலின்”. 1928-ம் ஆண்டில் பெனிசிலியம் நொடேடம்' என்ற பூஞ்சையிலிருந்து சர் அலெக்சாண்டர் பிளமெங்கிங் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பெனிசிலினை , பல ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு மருத்துவத்திற்கு முதன் முதலில் 1941-ம் ஆண்டு பயன்படுத்தியவர், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மானிலத்தைச் சேர்ந்த சர் ஹொவர்ட் வால்டர் புளோரி. அதோடு மக்களின் மருத்துவத்திற்கு பயன் படும் வகையில் பெருமளவில் தயாரிக்கும் முறையை 1944-ம் செயல்முறை படுத்தியவர். இதற்காக , மருத்துவத்துறை சார்ந்த நோபல் பரிசினை 1945-ம் ஆண்டு சர் ஹொவர்ட் வால்டர் புளோரி பெற்றுள்ளார். இப்பரிசு சர் எர்னஸ்ட் போரிசஸ் செயின் மற்றும் சர் அலெக்சாண்டர் பிளமெங்கிங் ஆகியோருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.
Share


