நோபல் வென்ற சர் ஜான் கேரவ் எக்கெல்ஸ்!

Source: Remadevi
ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட சர் ஜான் கேரவ் எக்கெல்ஸ் நரம்பணு ஆராய்ச்சியாளர் மற்றும் மெய்யியல் ஆராய்ச்சியாளர். நாம் புலனகளை உணர்ந்துக் கொள்வதற்கு (உதாரணம் தொடு உணர்ச்சி) நமது நரம்பணுக்கள் ஒன்றோடோன்று தகவல் பரிமாற்றம் செய்வதற்கு நரம்பணுக்களுக்கு இடையே உள்ள குறுகிய பகுதியில் நடைபெறும் வேதியலும் அதன் மூலம் தூண்டப்படும் மின்சக்தியும் ஆகிய இரண்டும் காரணம் என்ற கண்டுபிடிப்பிற்காக 1963-ம் ஆண்டில் மருத்துவதுறை சார்ந்த நோபல் பரிசினை பெற்றார். ஜான் கர்டின் எக்கெல்ஸ் அவர்களின் மெய்யியல் ஆராய்ச்சிகளும் புத்தகங்களாக வெளிவந்தன. இதன் மூலம் உலகம் அவரை ஓர் தத்துவஞானியாகவும் ஏற்றுக் கொண்டது. இவர் குறித்த அரிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.
Share



