இரத்தத்தின் வெள்ளை அணு ஆராய்ச்சிக்கு நோபல் வென்ற டோஹெர்டி !

Source: Remadevi
பீட்டர் டோஹெர்டி அவர்கள் 1940 ஆம் ஆண்டில் பிரிஸ்பேன் நகரில் பிறந்தவர். குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்று பின்னர் எடின்பரோ பல்கலைகழக கலாநிதி பட்டமும் பெற்றவர். உடலில் நோயால் பாதிக்கப்பட்ட செல்களை கண்டு பிடித்து அதனை அழித்து நோயிலிருந்து உடலை காப்பதில் இரத்தத்தின் வெள்ளை அணுக்களின் டி-செல்கள் எவ்வாறு உதவுகின்றன என்ற அவரின் ஆராய்ச்சி 1996-ம் ஆண்டு மருத்துவ துறை சார்ந்த நோபல் பரிசினை பெற்றுக்கொடுத்தது. தற்போது டென்னசியிலுள்ள செயிண்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மையம் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் மற்றும் நோய் தடுப்பு திணைக்களத்தில் பணிபுரிகிறார். இவர் குறித்த வரலாற்றை “நம்ம ஆஸ்திரேலியா” நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் 4EB தமிழ் ஒலிபரப்பின் ரமாதேவி தனசேகர் அவர்கள்.
Share



