ஒக்ஸ்ஃபாம் (Oxfam) என்ற தொண்டு நிறுவனத்தின் சர்வதேச நிர்வாக இயக்குநர் பொறுப்பை இந்த வருட ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டவர், டாக்டர் தனஞ்சயன் ஸ்ரீஸ்கந்தராஜா. சிறு வயதை சிட்னியில் கழித்த டாக்டர் தனஞ்சயனை இலண்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த குலசேகரம் சஞ்சயனிடம் தனது சிறுபிராயம், சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான அவரது ஆர்வம் மற்றும் ஒக்ஸ்ஃபாமில் அவரது தற்போதைய பங்கு என்பன குறித்து மனம் திறந்து பேசுகிறார் டாக்டர் தனஞ்சயன் ஸ்ரீஸ்கந்தராஜா.