மாதவிடாய் நாப்கின் அணிந்த “PadMan”முருகானந்தம்

Source: Raj
சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “PadMan”. மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிடரி நாப்கினை மிகக் குறைந்த விலையில் தயாரிக்கும் எந்திரத்தைக் கண்டுபிடித்த முருகானந்தம் அவர்களின் கதை இன்று உலக அளவில் பேசப்படுவகையில் திரைப்படமாகியுள்ளது. உலகின் பிரபல TIME இதழ்கூட உலகில் அதிக செல்வாக்குமிக்கவர்கள் என்று 100 மனிதர்களை தெரிவுசெய்தபோது தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பையே முடிக்காத ஏழை நெசவாளி ஒருவரின் மகனான பாப்பநாயக்கன்புதூர் கிராமத்தின் அருணாசலம் முருகானந்தம் இடம்பெற்றிருந்தார். வியப்பும், திருப்பங்களும் நிறைந்த முருகானந்தம் அவர்களின் கதையை மீண்டும் ஒலிக்கவிடுகிறோம். அவரிடம் கதைகேட்டவர் – றைசெல்.
Share



