சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கையை விட்டு வெளியேறி, கனடாவில் தஞ்சம் புகுந்திருந்த சுகந்தன் சண்முகநாதன், மீண்டும் இலங்கையின் வடமாகாணம் திரும்பியுள்ளார். கனடாவில் அவர் அனுபவத்தில் கற்றவற்றைக் கொண்டு, பனையிலிருந்து பெறப்படும் பல பொருட்களுக்கு மீள் உயிர் கொடுத்துள்ளார். அவரது பின்னணி குறித்தும், அவரது செயற்பாடுகள் குறித்தும் குலசேகரம் சஞ்சயன் கேட்டறிந்து கொள்கிறார்.