Pandora papers என்று அழைக்கப்படும் ஆவணங்கள் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகின்றன. இதுவரை வெளிவராமல் மறைத்துவைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ஆவணங்கள் International Consortium of Investigative Journalists என்ற ஊடகவியலாளர்கள் குழு வெளியிட்டதாக அது கூறுகிறது. உலகில் கோடீஸ்வரர்களாலும் அதிகாரம் மிக்கவர்களாலும், அரசியல்வாதிகளாலும், தனிப்பட்டவர்களாலும் பதுக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட கோடிக்கணக்கான நிதி, வரி ஏய்ப்பு, money laundering- சட்டத்திற்கு புறம்பாக நிதி தொடர்பான ஏராளமான ஆவணங்கள் இருப்பதாக Pandora papers கூறுகிறது. இந்த ஆவணங்களிலுள்ள முக்கிய தகவல்களை விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர் : றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





