SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“பெரியாரின் கருத்துக்கள் மேற்கத்திய சமூகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன”

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் 144-வது பிறந்தநாள் (செப்டம்பர் 17 )நேற்று சமூக நீதி நாளாகக் கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் திராவிட அரசியலின் தந்தை என்று பார்க்கப்படுகிறார். பெரியார் அவர்களின் சமூக நீதி சார்ந்த கொள்கை பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திவரும் அதே வேளையில் அவரின் கொள்கை அவ்வப்போது சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுண்டு. இந்த பின்னணியில் Periyar: A Study in Political Atheism எனும் புத்தகத்தின் ஆசிரியர் முனைவர் கார்த்திக் ராம் மனோகரன் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார். இங்கிலாந்தில் Wolverhampton பல்கலைகழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
Share