ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு ஒரு நிரந்தர இருக்கையை ஆரம்பிக்க அமெரிக்கத் தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் ஒரு நிரந்தர தமிழ் துறையை ஆரம்பிக்க சிலர் முனைப்போடு செயற்பட்டு வருகிறார்கள். இந்த முயற்சிக்கு, இலண்டன் பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முயற்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான சிவா பிள்ளை அவர்களிடம் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.