தமிழர்களின் தனிப்பெரும் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள், சிட்னி நகரில் மிகவும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்திய இவ்விழா ஆஸ்திரேலிய தமிழ் சமூகமே பாராட்டும் வகையிலும், பெருமைகொள்ளும் வகையிலும் இனிதே நிறைவேறியுள்ளது. இது குறித்து இந்நிகழ்வின் ஊடக அனுசரணையாளர் என்ற முறையில் SBS தமிழ் ஒலிபரப்பு மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.