தமிழர்களின் தனிப் பெரும் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள், பிரிஸ்பேர்ன் நகரில் மிகவும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. Brisbane தாய் தமிழ் பள்ளியும் Queensland தமிழ் மன்றமும், Ipswich நகரசபை, மற்றும் மாநில அரசினதும் பல்வேறு தமிழ் அமைப்புகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்ட இவ்விழாவை ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் மட்டுமின்றி பரந்த ஆஸ்திரேலியர்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். இது குறித்து இந்நிகழ்வின் ஊடக அனுசரணையாளர் என்ற முறையில் SBS தமிழ் ஒலிபரப்பு மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து இந்நிகழ்வு குறித்த மக்கள் கருத்துகளை முன்வைக்கிறார் சிவா கைலாசம். நிகழ்ச்சி தயாரிப்பு, குலசேகரம் சஞ்சயன்.