மாதா மாதம், எமது மின்சார செலவு ஏறிக்கொண்டே போகிறது.... இதை தீர்க்க வழியில்லையா என்று நாம் எல்லோரும் அங்கலாய்த்துக்கொண்டிருக்கும் போது, ஜோர்ஜியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் ராமராஜா ராமசாமியும் அவரது ஆராய்ச்சி உதவியாளர் யோகேஸ்வரன் உமாசங்கரும் தாவரங்களை மின் நிலையங்களாக மாற்றும் திட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்கள். இரண்டு தமிழர்களின் இந்த கண்டுபிடிப்பை எளிய மொழியில் உங்களுக்கு அறியத் தருகிறார், குலசேகரம் சஞ்சயன்.நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மின்சார கட்டணம் பற்றிய சிறு நாடகத்தை நடத்தியவர்கள், எட்வர்ட் அருள்நேசதாசனும் நிருத்தா தர்மாவும்.
Share


