மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் பூதவுடல், ஸ்கொட்லாந்தின் தலை நகர் எடின்பரோவை சென்றடைந்தது. இலண்டன் நகருக்குப் புறப்படும் வரை அங்கே மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். Balmoral கோட்டையிலிருந்து அவரது பூதவுடல் ஆறு மணி நேரம் பயணம் செய்து Edinburgh நகருக்கு எடுத்து வரப்பட்ட போது சாலைகளில் மக்கள் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
இதற்கிடையில், அவரது தாய் மகாராணி எலிசபெத் இறந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர், மூன்றாம் சாள்ஸ், Great Britain மற்றும் Commonwealth மன்னராக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதற்காக, பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு விழா பல சடங்குகளுடன் இலண்டனில் நடைபெற்றது.
ஆஸ்திரேலியா உட்பட மற்றைய பல Commonwealth நாடுகளிலும் இதே போன்ற அறிவிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவை குறித்து Julien Oeuillet எழுதிய விவரணங்களைத் தொகுத்து, தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





