தென்னிந்தியாவில் ஆயிரக் கணக்கான கோயில்கள் இருப்பதும் அவை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு எனும் கும்பாபிசேகம் நடத்துவதும் வழக்கமாக இருக்கும் போது, புதுச்சேரியில் ஒரு முருகன் கோயில் குடமுழுக்கு பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த பின்னணிகளை, தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கிய வரலாற்று ஆய்வாளர் கோம்பை எஸ்.அன்வர் அவர்களுடன் அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.