ஆஸ்திரேலியாவிலுள்ள முதியவர்களில் மூன்றில் ஒருவர் ஆங்கிலத்தை முதன்மொழியாக கொண்டிராத நாடொன்றில் பிறந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்படியானதொரு பின்னணியில் முதுமைக்காலத்தில் அவர்களுக்கு மறதிநோய் ஏற்படும்போது அவர்கள் ஆங்கிலமொழியை மறந்து தமது தாய்மொழி மட்டும் நினைவில் வைத்திருக்கக்கூடும். அப்படியென்றால் முதியோர் இல்லத்தில் அவர்களது தாய்மொழி பேசும் ஒருவர்தான் பராமரிப்பாளாராக இருக்கவேண்டும் இல்லையா? ஆனால் அப்படியான சூழ்நிலை ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றதா? இல்லை என்ற பதில்தான் முதியோர் பராமரிப்பு துறை மீதான ரோயல் கமிஷன் விசாரணை மூலம் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share




