மதுரை கோவிந்தராஜ், மதுரை அரசு இசைக்கல்லூரியில் நாட்டுப்புறக்கலைத்துறை விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ஆசிய அளவில் ஐந்து அடி உயர மரக்கால் ஆட்டத்தில் உலக சாதனை படைத்தவர். மண்ணின் கலைகளை பாதுகாப்போம் என்ற முன்னெடுப்பில் கலைமேம்பாட்டுநிறுவனம் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த வாரம் சிட்னியில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் பங்கு கொண்டு, தன் கலையை எம் பார்வைக்கு எடுத்து வரவிருக்கும் மதுரை கோவிந்தராஜனை அறிமுகப்படுத்தும் உரையாடல் ஒன்றை மேற்கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share




