தமிழ்நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஒவ்வொரு அகதிக்கும் தமிழ்நாடு அரசு உதவித்தொகையாக குறைந்தபட்சம் 400 இந்திய ரூபாய் முதல் அதிகபட்சம் 1000 இந்திய ரூபாய் வரை வயதிற்கு ஏற்றாற் போல் வழங்குகின்றது. பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாட்டில் இத்தொகையை கொண்டு மட்டுமே வாழ்வதென்பது சாத்தியமற்றது. இந்த சூழலில், தங்கள் வாழ்க்கையை நிலைநிறுத்தி கொள்வதற்காக பெரும்பாலான அகதிகள் அருகாமை பகுதிகளில் தினக்கூலி பணிகளுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அகதிகளின் பொருளாதார நிலைப் பற்றியும் அந்த நிலை எப்படி இளம் தமிழ் அகதிகளின் கல்வியில் தாக்கம் செலுத்துகிறது என்பதையும் கல்விகற்ற அகதிகள் வேலைவாய்ப்பு குறித்தும் பேசுகிறது இப்பாகம்.
'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல்.
Share





