அகதிகள் ஆஸ்திரேலியா வந்தடைய முயற்சித்த கதைகள்

Source: Maga.Tamizh Prabhagaran
ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்லும் முயற்சிகள் 2009 ஆம் ஆண்டு இலங்கை போர் முடிவுக்கு பின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் துவண்டு கிடந்த ஈழத்தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கை துளிராக பரவியது. “தாங்கள் கொல்லப்படுவோம்’ என அஞ்சிய பலர் உயிரை அடமானம் வைத்து உயிர் பிழைப்பதற்கான வழி என்று ஆபத்தான படகுப் பயணத்தை மேற்கொண்டனர். தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களுக்கும் படகில் ஆஸ்திரேலியா வந்தடையும் “கனவுகள்” குறித்து பானுமதி உள்ளிட்ட சில அகதிகள் பகிர்ந்துகொள்கின்றனர். 'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்தவர்: றைசெல். பாகம்: 6.
Share



