படகுவழி ஆஸ்திரேலியா வந்தடைய முயற்சித்த தமிழ் அகதிகளுக்கு என்ன நடந்தது?

Source: Getty Images
2012 முதல் ஆஸ்திரேலியாவின் பெரும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்த ‘படகு வருகை’ அப்போதைய தேர்தலிலும் எதிரொலித்தது. படகுகளின் வருகையை தடுக்க கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கை கொண்டு வரப்படும் என உறுதியளித்த லிபரல் கட்சி, தேர்தல் வெற்றிக்கு பின் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தது. 2013 முதல் படகுகள் தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டன, தஞ்சக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர். அவ்வாறு நாடுகடத்தப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களின் கதைகளையும், காணாமல் போன தஞ்சக்கோரிக்கையாளர் பற்றியும், படகு பயணங்கள் தொடர்பான ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அரசின் நிலைப்பாட்டையும் இப்பாகத்தில் நீங்கள் கேட்கலாம். 'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல்.
Share



