அகதி 09: இலங்கை திரும்புவதா? இந்தியக் குடியுரிமையா?

Source: Maga.Tamizh Prabhagaran
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் கொள்கைக் குறிப்பின் படி, மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 107 அகதி முகாம்களில் 61,422 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர். அத்துடன் கூடுதலாக 35,316 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியுள்ளனர். இதில் ஒவ்வொரு அகதியும் தங்கள் எதிர்காலம் குறித்து மாறுபட்ட பார்வைகளைக் கொண்டுள்ளனர். நிச்சயமற்ற தன்மையில் சிக்கியிருக்கும் அவர்களது எதிர்காலத்துக்கு இடையே ‘சொந்த நாட்டுக்கு திரும்புதல், இந்திய குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை கோருதல்’ என்ற எண்ணங்களுக்குள் சுழன்று கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணங்களுக்கு பின்னே உள்ள காரணங்களையும், தமிழ் அகதிகள் தொடர்புகள் பல தரப்பு பார்வைகளையும் இப்பாகத்தில் கேட்கலாம். 'அகதி' என்ற ஒலித்தொடரை வழங்குபவர் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன், இதனை SBS தமிழ் வானொலிக்காக தயாரித்திருப்பவர் றைசெல். பாகம் – 9.
Share



