அகதிகளுக்காகக் குரல் கொடுப்போர், அகதிகளுக்கு ஆலோசனை வழங்குவோர், ஆய்வாளர்கள், ஆஸ்திரேலிய மற்றும் சர்வதேச அகதிகள் என்று 400 பேர் பங்கு கொள்ளும் மாநாடு ஒன்று, நேற்றும் இன்றும் (பெப்ரவரி 13, 14) மெல்பேர்ணில் நடைபெற்றது. Refugee Council of Australia என்ற அமைப்பு ஒழுங்கமைத்த இந்த மாநாட்டில் பங்கு கொண்ட அனைவரும், "அகதிகள் குறித்த கொள்கைகள் வகுப்பதில் அகதிகளின் கருத்துகள் உள்வாங்கப்பட வேண்டும்" என்று, ஓங்கிக் குரல் கொடுத்துள்ளார்கள். இது குறித்து Luke Waters மற்றும் Tara Cosoleto எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.