எலி வளையானாலும் தனி வளை வேண்டும் என்பது தமிழ் பழமொழி. ஆஸ்திரேலியாவில் வாழும் பலருக்கு, சொந்த வீடு வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. ஆனால், அது கனவாகிப் போகிறது என்று 2016ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் சொல்கின்றன. அதே வேளை, வாடகை வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 10 நாடுகளில் வசிப்பவர்கள் எப்படியான வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள் என்ற ஆய்வு, அவர்களிடமிருந்து ஆஸ்திரேலியர்கள் என்ன கற்றுக் கொள்ளலாம் என்று ஆராய்ந்திருக்கிறது. இது குறித்து, Peggy Giakoumelos எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.