வெளிநாடுகளுக்குச் சென்ற ஆஸ்திரேலியர்கள் கொரோனா வைரஸ் பரவலையடுத்து பலர் நாடு திரும்ப இயலாமல் பல நாடுகளில் தொடர்ந்து தவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழகத் தலைநகர் சென்னையிலிருந்து கடந்த திங்களன்று சிறப்பு விமானம் மூலம் சுமார் 390 பேர் தெற்கு ஆஸ்திரேலியத் தலைநகர் அடிலெய்ட் வந்திறங்கினர். இவர்கள் தற்போது விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படி தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சசிதரன் அவர்கள் தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share





