முறைப்படி சங்கீதம் பயின்றுவரும் உள்ளூர்க் கலைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக, சிட்னி துர்க்கையம்மன் ஆலயத்தினர், சப்தஸ்வரா இசைக் குழுவினருடன் இணைந்து நடத்தும் நிகழ்ச்சி இராக சங்கமம். வருகிற சனியிரவு நடைபெறவுள்ள இப்போட்டி நிகழ்ச்சிக்கு இந்தியக் கலைஞர்களும் வருகைதந்துள்ளனர். இந்நிகழ்ச்சி பற்றி அறிவதற்காக தமிழகத்தின் வளர்ந்துவரும் இசையமைப்பாளர் சதீஷ், நிகழ்ச்சி ஒருங்கமைப்பாளர் ஷன் குமாரலிங்கம், சப்தஸ்வரா இசைக்குழுவின் பாவலன் விக்ரமன் மற்றும் போட்டியாளர்களான ஆகாஷ், சித்திரா ஆகியோரை சந்திக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share




