ஆஸ்திரேலியாவில் வரதட்சணை குறித்து கடுமையான சட்டம் அவசியம் என்று குரல்கள் வலுத்து வருகின்றன என்றும், இது குறித்து செனட் குழு விசாரணை நடக்க இருகிறது. இந்த விசாரணைக் குழுவைத் தலமை தாங்கும் செனட்டர் Louise Pratt அவர்களும், NSW மாநிலத்திலுள்ள Greenway தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Michelle Rowland அவர்களும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள இந்தியப் பின்னணி கொண்டவர்களை நேற்று சந்தித்து இது குறித்துப் பேசினார்கள். அது குறித்த நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.