காணாமலாக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக அரசின் செயல்பாடுகளை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் அமைப்புகள் நிராகரித்துள்ளன. இது தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவித்து வருகிறார்கள் .காணாமலாக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகை ஒரு இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சமாக அதிகரித்துள்ள நிலையில் இவற்றையெல்லாம் புறக்கணித்துள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் அமைப்பு தமக்கு சர்வதேசத்தினுடாக நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





