இளவேனிற்காலம் அல்லது வசந்த காலம் பிறந்து விட்டது. வீட்டில் பூந்தோட்டங்களும் காய்கறித் தோட்டங்களும் புதிதாக ஆரம்பிக்கவோ அல்லது இருப்பவற்றைப் புதுப்பிக்கவோ தக்க தருணம். இந்த வேளையில் பின் முற்றத்தில் நாம் என்ன மரங்களை வளர்க்கலாம், அவற்றை எப்படி பராமரிக்கலாம் என்று விளக்குகிறார், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவரும், ஆஸ்திரேலிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவருமான தர்மன் சவரிமுத்து. அவரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.