இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் நெருங்குகின்றது. மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு, சிங்கள மயமாக்கல் என பல்வேறு பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகள் காணப்படவில்லை. இதேவேளையில், கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் நிலம் அபகரிப்புக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. அதுபோல் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்திற்கு நிர்வாக அதிகாரம் கோரி மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டங்களுக்கு தீர்வுகள் இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடர்கின்றன. இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





