உங்கள் எண்ணம் என்ன?

Source: SBS
தூத்துக்குடியில் Sterlite ஆலையை மூடவேண்டும் என்று கோரிய மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் பலியான செய்தி நாமறிந்தது. கலவரத்தை அடக்கவே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தமிழக அரசு கூறுகிறது. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எனும் கேள்வியுடன் நாம் நடத்திய “வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் நேயர்கள் முனவைத்த கருத்துக்களின் தொகுப்பு. அத்துடன் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டவர் தமிழ் நாட்டிலிருந்து எச்.பீர்முஹம்மது அவர்கள். எழுத்தாளர், அரசியல் விமர்சகர், ஐந்து புத்தகங்களை எழுதியவர். தி இந்து, நக்கீரன், உயிர்மை மற்றும் இணையதளங்களில் தொடர்ந்து எழுதி வருகின்றவர். பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி விருது, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற விருது, உயிர்மை சுஜாதா விருது போன்ற பல விருதுகளை பெற்றவர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.
Share


