மேற்படிப்பிற்காக, வெளி நாடுகளிலிருந்து இங்கு வந்து கல்வி கற்க ஆரம்பித்த பலர், Covid-19 தொற்று இங்கும் பரவி முடக்க நிலை அறிவிக்கப் பட்ட போது, அவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விட்டார்கள். அவர்களில் பலர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்ப முடியாமல் அவர்கள் நாடுகளில் இருந்து கொண்டே இணைய வழியாக அவர்கள் கல்வியைத் தொடர்கிறார்கள்.
ஆனால், பல்கலைக்கழகத்தில் பெறக்கூடிய நட்புகளை இணைய வழியாகப் பெற முடியுமா? இந்த முடக்க நிலை உருவாக்கிய கட்டுப்பாடுகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்ற தங்கள் அனுபவங்களை இந்தியா திரும்பியிருக்கும் மூன்று சிட்னி பல்கலைக்கழக மாணவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.




