NSW மாநிலத்தில் தமிழை பள்ளியில் எல்லோரும் கற்க நீங்கள் உதவுங்கள்!

Source: SBS Tamil
NSW மாநிலத்தில் மேலும் புதிதாக 5 மொழிகளை எந்த பள்ளிக்கூடத்திலும் கற்கலாம் என்பதாக NSW மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த 5 மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ் மொழிக்கான பாடத்திட்டத்தை NSW மாநில கல்வித்துறை வடிவமைத்துள்ளது. ஆனால் இந்த பாடத்திட்டத்தை அரசு அங்கீகரிக்கும் முன்பு இந்த பாடத்திட்டம் தொடர்பாக தமிழ் சமூகம் தனது கருத்தை முன்வைக்கவேண்டும் என்று அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் பாடத்திட்டம் தொடர்பான உங்கள் கருத்தை பினவரும் இணைப்பில் சென்று பதிவிடுங்கள்: http://educationstandards.nsw.edu.au/wps/portal/nesa/k-10/learning-areas/languages/syllabus-development தமிழ் பாடத்திட்டம் தொடர்பான உங்கள் கருத்து ஏன் முக்கியம் என்று விளக்குகின்றனர் திருநந்தகுமார் ( NSW சமூக பாடசாலைகளின் கூட்டமைப்பின் தலைவர்), செந்தில் ராமலிங்கம் (அனைத்து பாலர்மலர் பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர்) மற்றும் சௌந்தரி கணேசன் (Wentworth தமிழ்பாடசாலை ஆசிரியர்) ஆகியோர். இவர்களோடு உரையாடியவர்: றைசெல்.
Share



