நாளை தைப் பொங்கல் நாள். அது மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் மட்டுமின்றி, உலகமே போற்றும் திருக்குறளை எமக்குத் தந்த திருவள்ளுவரின் 2050வது பிறந்த நாள். திருக்குறள் குறித்தும், திருவள்ளுவர் குறித்தும் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் செந்தலை கௌதமன் மற்றும் 'ஆய்வுக் களஞ்சியம்' என்ற மாத இதழ் ஆசிரியருமான எஸ். பத்மநாபன் ஆகியோரது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.