தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் பேசும் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு வரலாற்றுப் பதிவு நடந்தேறியுள்ளது. தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கட்டுரையாளர்கள் என்று ஐவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். கனிமொழி (தி.மு.க), தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கட்சி), ஜோதிமணி (காங்கிரஸ்), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்) ஆகியோர் நாடாளுமன்றம் செல்கின்றனர். இலக்கியவாதிகளின் அரசியல் வெற்றியின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளரும், கவிஞரும், திரைப்பட கலைஞருமான குட்டி ரேவதி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share





