வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக இந்த தொகுதியிலும் வெற்றிபெற வேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அதே போல் அதிமுகவும் இழந்த வாக்கு வங்கியையும், மக்கள் செல்வாக்கை திரும்ப பெற வேண்டும் என்றால் வேலூர் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். வேலூர் தேர்தல் களம் குறித்து ஒரு பார்வை : தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் .
Share




