காவலூர் ராசதுரை என அழைக்கப்படும் மரியாம்பிள்ளை டேவிட் ராஜதுரை (அக்டோபர் 13, 1931 - அக்டோபர் 14, 2014) அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். பன்முக ஆளுமை கொண்டவர். சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், மதிப்பாய்வு, திரைப்படம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்டவர். காவலூர் இராசதுரை பற்றிய தமிழ்த்தடம் நிகழ்ச்சி படைப்பவர் யசோதா பத்மநாதன் அவர்கள்.